October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய – இலங்கை பிரதமர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடலுக்கு ஏற்பாடு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே எதிர்வரும் 26 ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீடியோ ஊடாக இந்த கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார விடயங்கள்மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பற்றியோ , அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு யோசனை பற்றியோ இதன்போது கலந்துரையாடப்படாது என்றே கூறப்படுகின்றது.