July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவின் முதல் கட்ட கொரோனா தடுப்பூசிகளைப் பொறுப்பேற்றார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ

இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்பாக இலங்கைக்கு வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொறுப்பேற்றுள்ளார்.

இந்தியாவின் வெக்சின் மைத்ரி திட்டத்தின் கீழ் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் தடுப்பூசிகள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

தடுப்பூசிகளை இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கையளித்துள்ளார்.

முதல் கட்டமாக இலங்கைக்கு 5 இலட்சம் தடுப்பூசிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்திய விமான சேவைக்கு சொந்தமான எயார் பஸ் 321 விமானம் மும்பாய் விமான நிலையத்தில் இருந்து தடுப்பூசிகளை எடுத்து வந்துள்ளது.

42 பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில், குறித்த தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

This slideshow requires JavaScript.