June 16, 2025 14:16:19

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் ராகுல் காந்தி

(Photo /@INCTamilNadu/Twitter)

தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்றத்தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

அதற்கமைய இன்று டெல்லியிலிருந்து கோவை விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் திரண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ராகுல் காந்தி எதிர்வரும் 25 ஆம் திகதி வரை கோவை, திருப்பூர் ஈரோடு, திண்டுக்கல்  மற்றும் கரூர் மாவட்டங்களில் தேர்தல் பிராசரத்தில் ஈடுபட்டவுள்ளார்.

இதேபோல தமிழகத்தில் காங்கிரசை வலுப்படுத்தும் வகையிலும், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும் ராகுல்காந்தி களமிறங்கி உள்ளார்.

இதனையடுத்து கோயம்புத்தூரில் முதல் தேர்தல் பரப்புரையில் பேசிய ராகுல் காந்தி,

“தமிழகத்தில் எனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி. தமிழகத்திற்கு வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று.

மேலும் நீங்கள் விரும்பும் அரசை கொண்டு வரத்தான் தமிழகம் வந்துள்ளேன். நான் இங்கு எந்த சுயநலத்திற்காகவும் வரவில்லை.

ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்ற முயற்சியை எதிர்த்து நாம் போராட வேண்டி உள்ளது” எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.