July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயிரிழந்த தமிழக மீனவர்களின் சடலங்கள் இந்திய காவல் படையிடம் இன்று ஒப்படைப்பு

இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் உயிரிழந்த 4 இந்திய மீனவர்களின் உடல்களும் இந்திய கடலோர காவல் படையினரிடம் இன்று  ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 18 ஆம் திகதி இந்தியாவிலிருந்து இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சுமார் ஐம்பதிற்கும் அதிகமான படகுகள் வருகை தந்தன.

இதன்போது நெடுந்தீவு கடலுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீன்பிடி படகொன்றும்  இலங்கை கடற்படையின் டோறா படகொன்றும் மோதிக்கொண்டதில்  விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தின்போது படகில் இருந்த நான்கு தமிழக மீனவர்களும் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளின் போது தமிழக மீனவர்கள் 4 பேரின் சடலங்கள் கரைக்கு கொண்டு வரப்பட்டன.

குறித்த 4 பேரின் உடல்களும் யாழ். வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு நேற்றிரவு கொண்டு வரப்பட்டன.

இந்த நிலையிலேயே  மீனவர்களின் சடலங்கள் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு இந்திய காவல் படையினரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

This slideshow requires JavaScript.