July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியா: கொரோனா தடுப்புமருந்து தயாரிக்கும் சேரம் நிறுவன கட்டடத்தில் தீ, ஐவர் பலி

File Photo: Twitter/@odpdh

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சேரம் நிறுவனத்தின் புனேவில் உள்ள கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ் தீ விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுழைவாயிலில் உள்ள ஒரு கட்டிடத்தின் நான்காவது மற்றும் ஐந்தாவது மாடியில் மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் மூன்று மணித்தியாலங்கள் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

எனினும் கட்டிடத்தின் உள்ளே சிக்குண்டுள்ள சிலரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

 

https://twitter.com/ARanganathan72/status/1352189511132868612?s=19

இந்த தீ விபத்தில் கொரோனா தடுப்பு மருந்து பிரிவுக்கு சேதம் ஏற்படவில்லை எனவும் தடுப்பு மருந்து தயாரிப்பில் தடை ஏற்படாது எனவும் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆதர் பூனவாலா தெரிவித்துள்ளார்.

அத்துடன், தீ விபத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.