April 20, 2025 17:57:00

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறிப் பாயும் காளைகள் – களத்தில் நின்றாடும் வீரர்கள்

தமிழ்நாடு மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றன.

தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்று அவனியாபுரத்தில் வழக்கமான உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறன.

வாடிவாசல் வழியாக சீறிப் பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து அடக்க முற்பட்ட காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

This slideshow requires JavaScript.

சில காளைகள், வீரர்களின் பிடியில் சிக்காமல் களத்தில் நின்று விளையாடின.
இன்றைய ஜல்லிக்கட்டு போட்டிக்கு 788 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 430 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

போட்டிகளில் வெற்றிப் பெறுவோருக்கு மிகப் பெறுமதியான பரிசுகள் வழங்கி வைக்கப்படுகின்றன.