July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் பலி

இந்தியாவின் மகாராஷ்டிரம் மாநிலம், பண்டாரா அரசு பொது மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் பிரிவில் இருந்த பத்து பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

பண்டாரா அரசு பொது மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் வார்டில் இருந்து புகை வெளியே வருவதைக் கண்ட செவிலியர் ஒருவர், உடனடியாக அதிகாரிகள் மற்றும் பிற ஊழியர்களுக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.அதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு வீரர்களின் மீட்பு நடவடிக்கையால் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் இருந்த வார்டில் இருந்த புதிதாகப் பிறந்த 17 குழந்தைகளில் 7 குழந்தைகளை மட்டுமே அவர்களால் உயிருடன் மீட்க முடிந்ததுடன்,ஏனைய 10 குழந்தைகளை மீட்க முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குழந்தைகள் அனைவரும் ஒரு மாதம் முதல் மூன்று மாதங்களுக்கும் இடைப்பட்டவர்கள் என்று மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.

நான்கு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.