July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன இராணுவ வீரர் கைது

(File Photo/Ladakh/wikipedia)

இந்திய எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி  நுழைந்த சீன இராணுவ வீரரை இந்திய இராணுவத்தினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் உள்ள தெற்கு பாங்காங் ஏரி அருகே, சீன இராணுவ வீரர் உள்நுழைந்ததையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அந்த விசாரணையில் சீன வீரர் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக தெரியவந்ததுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சீன பாதுகாப்பு படையினருக்கு இந்திய இராணுவப்படையினர் தகவல் கொடுத்துள்ளதுடன் உரிய நடைமுறைகளுக்குப் பின் விரைவில் பிடிபட்ட வீரர்  விடுவிக்கப்படுவார் என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபரில் இந்திய எல்லைக்குள் நுழைந்த சீனா இராணுவ வீரரை கைதுசெய்த இந்திய படையினர் அவரை சீன அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தனர்.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் லடாக் எல்லைப் பகுதியில் இரு நாட்டு இராணுவத்தினரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டதில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இதையடுத்து எல்லையில் பதற்ற நிலை ஏற்பட இரு நாடுகளும் படைகளைக் குவித்து வைத்துள்ளனர்.