July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த முடியும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று 100 சதவீத இருக்கைகளைப் பயன்படுத்தி திரையரங்குகள் செயல்பட கடந்த 4ஆம் திகதி தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில் மத்திய அரசின் அறிவுரை மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயற்பட அனுமதி அளிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கூடுதல் காட்சிகளைத் திரையிட்டுக் கொள்ள திரையரங்குகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன் இந்த உத்தரவு உடனடியாக அமுலுக்கு வருகின்றது.

கொரோனா நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடிக்கவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

பொதுமக்களின் நலன் கருதி, அரசு எடுத்துவரும் கொவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.