July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியப் படைகளுக்கு எதிராக யார் செயற்பட்டாலும் அழிக்கப்படுவார்கள்’

இந்திய படைகளை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என முப்படைத் தளபதி பிபின் ராவத் எச்சரித்துள்ளார்.

மேலும் இந்திய ராணுவ வீரர்களின் கடமை உணர்ச்சி மிகவும் அளப்பரியது என புகழ்ந்துள்ளார் பிபின் ராவத்.
தமது கடமையைத் தாண்டி நாட்டின்மேல் கொண்ட பற்றினால் ராணுவ வீரர்கள் கடும் குளிரிலும் எல்லையில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் பாராட்டியிருக்கிறார்.

அருணாச்சல பிரதேச எல்லையில் இறுதி முனையான லாேகித், திபாங் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட முப்படைத் தளபதி ராணுவத்தினரை சந்தித்து பேசியுள்ளார்.

மேலும் அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமில் சீனாவை ஒட்டியுள்ள எல்லையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளையும் அவர் ஆய்வு செய்துள்ளார்.

இந்திய படைகளை தவிர உலகில் வேறு எவரும் இதுபோன்ற சவாலான பகுதிகளில் காவல் பணியில் ஈடுபட முடியாது என ராணுத்தினரை சந்தித்த முப்படைத் தளபதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.