May 26, 2025 23:54:56

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியா- இங்கிலாந்துக்கு இடையே ஜனவரி 6 முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்

இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு எதிர்வரும் 6ம் திகதி முதல் விமானங்கள் இயக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வேகமாக பரவிய நிலையில் ஜனவரி 7ஆம் திகதி வரை அங்கிருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் மத்திய அரசு தடை விதித்திருந்தது .

இந்நிலையில் இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு ஜனவரி 6 ம் திகதியும் , இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு ஜனவரி 8 ஆம் திகதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு,வாரத்திற்கு 30 விமானங்கள் இயக்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்