July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியாவிலேயே ஒரு தொண்டன் முதல்வராக இருக்கும் கட்சி அதிமுக தான்’

Photo: AIADMK /Twitter

தொண்டன் முதல்வராக மாறிய கட்சி அதிமுகதான் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று தொடங்கியது.

இந்தக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், தமிழக வரலாற்றிலேயே 30 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை அமைத்தது அதிமுக தான். மேடையில் அமர்ந்திருப்பவர்கள் யாரும் தொழிலதிபர்கள் கிடையாது சாமானியர்கள்.எதிரிகள் கூட உச்சரிக்ககூடிய தலைவர்தான் எம்.ஜி.ஆர். என தெரிவித்துள்ளார்.

மேலும் எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கத்தை வீழ்த்த நினைப்பவர்கள், வீழ்ந்து போவார்கள். தொண்டர்கள் கூட முதல்வராக கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க தான் நாளை நீங்களும் முதல்வராகலாம் என்றார்.

தொடர்து பேசிய அவர் இந்தியாவிலேயே ஒரு தொண்டன் முதல்வராக இருக்கும் ஒரே கட்சி அதிமுக தான். சில புல்லுருவிகள் அதிகமுவை வீழ்த்த நினைத்தன் அது தவிடுபொடியாகிவிட்டது என்றும் தெரிவித்தார்.

அத்தோடு நாட்டிலேயே அதிக தேசிய விருதுகளை வென்ற மாநில அரசு தமிழக அரசு. புயல் காலத்தில் புயலைவிட வேகமாக செயல்பட்டு நடவடிக்கைகள் எடுத்தோம்.

உயர்கல்வி படிப்போர் விகிதத்தில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.