May 31, 2025 9:54:14

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியாவில் ஜனநாயகம் இல்லை’

இந்திய மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கினர்.

அதன்படி சுமார் 2 கோடி பேரிடம் கையெழுத்து பெறப்பட்டு, ஜனாதிபதியிடம் அளிப்பதற்கு ஜனாதிபதி மாளிகைக்கு பேரணியாக கொண்டுசெல்லப்பட்டது.

ஆனால் பொலிஸார் அவர்களை வழியில் தடுத்து நிறுத்தி ராகுல்காந்தி மற்றும் ஒரு சிலரை மட்டுமே அனுமதித்தனர். பிரியங்கா காந்தி மற்றும் ஏனைய காங்கிரஸ்காரர்களை தடுப்புக்காவலில் வைத்திருந்தனர்.

ஜனாதிபதியை சந்தித்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி 2 கோடி பேர் கையொப்பமிட்ட மனுவை ராகுல் தலைமையில் காங்கிரசார் அளித்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று கூறினார்.

டெல்லியில் 29-வது நாளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அதற்கு நாடு தழுவிய அளவில் ஆதரவு இருக்கிறது. விவசாய சங்கத்தினர், தொழிற்சங்கத்தினர், எதிர்க்கட்சிகள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் என அனைவரின் ஆதரவும் இருக்கிறது.

இப்படி இருக்கையில், காங்கிரஸார் இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக, நாடு முழுவதிலும் இருந்து, இரண்டு கோடி கையெழுத்துக்களை பெற்றிருக்கிறார்கள்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஜனாதிபதி என்ன முடிவு எடுக்கிறார்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.