July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

ராமநாதபுரம் ,தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 36 மீனவர்களை கடந்த 14ஆம் திகதி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்களை விடுவிக்க வலியுறுத்தி இந்தியப் பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் தற்போது கடிதம் எழுதி இருக்கிறார்.

36 மீனவர்களையும் 5 மீன்பிடி விசைப் படகுகளையும் விடுவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு உடனடியாக அறிவுறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் கடிதம் மூலமாக கேட்டுக்காெண்டுள்ளார்.

இந்த பிரச்சினை தொடர்பாக இலங்கையின் உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியிருக்கிறார்.