October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேமந்த் கைது

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் தமிழக காவல்துறையினர் சித்ராவின் கணவர் ஹேமந்த் என்கின்ற ஹேம்நாத்தை கைதுசெய்துள்ளனர்.
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேமந்துக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.
சென்னை நசரத்பேட்டை அருகே ஹேமந்துடன் சித்ரா தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்து அவரது உடல் கடந்த புதன்கிழமை மீட்கப்பட்டது.
சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயாரும் நண்பர்களும் கூறிவந்தனர்.
இந்த நிலையிலேயே நசரத்பேட்டை காவல்துறையினர் இன்றிரவு சித்ராவின் கணவரை கைது செய்து விசாரித்துவருகின்றனர்.
சித்ராவின் மரணத்துக்கு கணவர் ஹேமந்த் தான் காரணம் என்ற சித்ராவின் தாயாரின் குற்றம்சாட்டை ஹேமந்தின் பெற்றோர் மறுத்துள்ளனர்.