July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீன நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் விமானத்தை வாங்கியது இந்தியா

இந்திய பெருங்கடலில் சீன நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் பலம் கொண்ட பி8 ரக போர் விமானத்தை போயிங் நிறுவனத்திடமிருந்து இந்தியா வாங்கியுள்ளது.

நீருக்கடியில் செல்லும் எதிரிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அவற்றை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை கொண்டு செல்லும் திறன் இந்த விமானத்திற்கு உண்டு என கூறப்படுகிறது .

ஏற்கனவே இதுபோன்ற 8 விமானங்கள் வாங்கப்பட்டு அவை கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக நான்கு விமானங்களை வாங்க முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், முதலாவது விமானம் தற்போது கோவா வந்தடைந்துள்ளது. மேலும் 6 விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில், வரும் ஆண்டுகளில் மொத்தம் 22பி 8 விமானங்களை கடற்படையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் படைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் இந்த விமானங்கள் உதவியதாக கூறப்படுகிறது. அதேபோல் லடாக்கில் பதற்றம் நிலவும் எல்லைப் பகுதியிலும் இந்த விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.