October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி அவசர ஆலோசனை

நடிகர் ரஜினிகாந் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையை எதிர்வரும் 30 ம் திகதி மேற்கொள்ளவுள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான நடவடிக்கைகள் தீவிரமடைய ஆரம்பித்துள்ள நிலையில், ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை மறுநாள், ரஜினிகாந்த ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மக்கள் மன்ற நிர்வாகிகளுக்குத் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அண்மையில் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு மற்றும் உடல்நலம் குறித்து வெளியான அறிக்கைக்கு அந்த அறிக்கை தன்னால் வெளியிடப்படவில்லை. ஆனால் உடல்நலம் பற்றி அதில் குறிப்பிட்டிருந்த தகவல் உண்மைதான் என விளக்கமளித்திருந்தார்.

அதேபோல் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து போஸ்ட்டர்கள் மூலம் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் அவர் மேற்கொள்ள இருக்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.