June 17, 2025 7:48:42

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நிஜ ஜோடிகள் மீண்டும் திரையில்

சூர்யாவும் ஜோதிகாவும், பூவெல்லாம் கேட்டுப்பார்,உயிரில் கலந்து, காக்க காக்க, பேரழகன், மாயாவி மற்றும் சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.அவ்வாறு சேர்ந்து நடிக்கும் தருணத்தில் காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பின்நாட்களில் ஜோதிகா குடும்பத்தை கவனித்துக் கொள்ள, சூர்யா மட்டும் தன் திரைப் பயணத்தை தொடர்ந்தார்.சிறிது காலத்துக்குப் பிறகு ஜோதிகாவும் அவருக்கு முக்கியத்துவமான கதைகளில் நடிக்க தொடங்கினார்.

தற்போது தமிழ் இயக்குனர் ஹலீதா ஷமீமும் மலையாள இயக்குனர் அஞ்சலி மேனனும் இணைந்து சூர்யா மற்றும் ஜோதிகாவை இணைத்து ஒரு கதையை தயார் செய்து வருகிறார்கள்.

இதை சூர்யாவே சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் அந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.