
நடிகர் அஜித்குமார் ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தன்னை இனி ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என அஜித் குமார் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
‘தல’ என்றோ அல்லது வேறெந்த அடைமொழியுடனோ குறிப்பிடாமல் அஜித், அஜித் குமார் அல்லது ஏ.கே.என்று மட்டும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என நடிகர் அஜித் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஜித் நடிப்பில் வரும் பொங்கலையொட்டி ‘வலிமை’ திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில்,அஜித் தனது உதவியாளர் சுரேஷ் சந்திரா மூலமாக இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
“பெரும் மரியாதைக்குரிய ஊடக பொதுஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனிவரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற்பெயரான அஜித்குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ.கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தல’ என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன் என அஜித்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.அன்புடன் அஜித்குமார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.