July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கும் நடிகை அனுஷ்கா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அனுஷ்கா.

தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

தமிழில் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடித்த இஞ்சி இடுப்பழகி படத்திற்கு பின்னர் அனுஷ்காவிற்கான திரைப்பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின.

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக அனுஷ்காவின் உடல் எடை அதிகரிப்பால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை இழந்தார்.

இந்நிலையில், தற்போது தெலுங்கில் புதிய படம் ஒன்றில் நடிகை அனுஷ்கா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு இயக்குனர் மகேஷ்பாபு இயக்கத்தில் ஒரு படத்தில் அனுஷ்கா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தெலுங்கில் ‘சாஹோ’ மற்றும் ‘ராதே ஷ்யாம்’ படங்களை தயாரித்து வரும் யுவி க்ரியேஷன்ஸ் நிறுவனம் அனுஷ்கா படத்தை தயாரிக்கவுள்ளது.

2006 ஆம் ஆண்டு மாதவன் நடித்த ‘ரெண்டு’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார் அனுஷ்கா.

தொடர்ந்து, விஜய் ,அஜித் ,ரஜினி, சூர்யா, சிம்பு என தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

அருந்ததி ,பாகுபலி 1, பாகுபலி பாகம் 2 ஆகிய படங்களில் அனுஷ்காவின் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

இதன் பின்னர் பேசப்படும் அளவுக்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இயக்குநர் மகேஷ் பாபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தமாகியுள்ளார்.

பொறுத்திருந்து பார்க்கலாம் இந்த படத்தின் மூலமாக அனுஷ்கா தனது அடுத்த இன்னிங்சை தொடங்குவாரா என.