July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஓடிடியில் வெளியாகும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’

இந்திய கடற்படை எல்லையில் முதன்முறையாக கடற்படை பாதுகாப்பை உருவாக்கியவராக அறியப்படும் குன்ஹாலி மரைக்காயரின் வாழ்க்கை வரலாறு, மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது.

ஒரு வரலாற்றுக் கதையை அடிப்படையாக வைத்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்துள்ள இப்படம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மூன்று தேசிய விருதுகளை குவித்த மோகன்லாலின் ’மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த கிராஃபிக்ஸ் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் இப்படம் தேசிய விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

திரையரங்குகளில் வெளியிடப்பட வேண்டிய படம் என பேசப்பட்டு வந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஓடிடியில் வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில், அங்கு திரையரங்குகள் பாதி அளவில் தான் திறக்கப்பட்டு இருக்கின்றன.

இந்நிலையில் முன்னணி நடிகர்கள் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள படங்கள் ஓடிடியை நோக்கியே நகர்கின்றன.

மலையாளத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தை முன்னணி இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜுன், மஞ்சு வாரியர், சுஹாசினி, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது.

கடந்த வருடமே வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா சூழ்நிலையால் பிற்போடப்பட்டது.

கேரளாவில் அக்டோபர் 25 ஆம் திகதி முதல் தான் தியேட்டர்கள் 50 விகித பார்வையாளர்களுடன் திறக்கப்பட்டுள்ளன.

திரையரங்குகளும் குறைந்த அளவிலேயே திறக்கப்பட்டுள்ளதால் ‘மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது என கூறப்படுகிறது.