
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவிற்கு நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
நடிகர் அஜித்தின் முகாமையாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டரில் இந்த இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.
நடிகர் புனித் ராஜ்குமாரின் துரதிர்ஷடவசமான மறைவை கேட்டு வருந்துகிறோம்.அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த துயரத்திலிருந்து மீண்டு வர பிரார்த்திக்கிறோம் என அஜித் மற்றும் ஷாலினி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
புனித் ராஜ்குமார் மரணம் கர்நாடகா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அங்கு மதுபான சாலைகள்,பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள், ஊர் மக்கள் என ஆயிரக் கணக்கானோர் ஆங்காங்கே கூடி நிற்பதால் சற்று அமைதியின்மை ஏற்பட்டது.
46 வயதாகும் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இன்று காலை மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
காலையில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
Condolence msg from Mr Ajith kumar.
Saddened to hear the unfortunate demise of Shri Puneeth kumar ji, may his family and friends gain strength to over come this grief.
Ajith kumar and Shalini Ajith kumar .— Suresh Chandra (@SureshChandraa) October 29, 2021