July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமந்தா – நாக சைதன்யா பிரிவு குறித்து நாகர்ஜூனா கவலை

திருமண வாழ்வை முடித்துக்கொள்வதாக நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து நாக சைதன்யாவின் தந்தையும் தெலுங்கு நடிகருமான நாகார்ஜூனா தனது வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.

மிகுந்த வருத்தத்துடன் இந்த நிகழ்வை தான் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக நாகர்ஜுனா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டள்ளார்.

நாக சைதன்யா – சமந்தா இடையேயான பிரிவு மிகவும் துரதிஷ்டவசமானது என நாகர்ஜுனா கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் செய்தி தான் நடிகை சமந்தா – நாக சைத்தன்யா பிரிவு குறித்த அறிவிப்பு.

இந்நிலையில் தனது மகன் நாக சைதன்யா – சமந்தா பிரிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து நாகர்ஜுனா விளக்கம் அளித்திருக்கிறார்.

”சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இந்தப் பிரிவு என்பது துரதிர்ஷ்டவசமானது. கணவன் மனைவிக்கு இடையே நடப்பது அவர்களது தனிப்பட்ட விஷயம் ஆகும்” என நாகர்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.

சமந்தா தனது குடும்பத்தினருடன் இருந்த அந்த வாழ்க்கையை ஒருபோதும் மறக்க முடியாது என நாகர்ஜுனா தெரிவித்திருக்கிறார்.

சமந்தா எப்போதுமே தனது குடும்பத்துடன் நெருக்கமானவர் என நாகர்ஜுனா உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இருவருக்கும் வேண்டிய சக்தியை இறைவன் வழங்க வேண்டுமெனவும் நாகார்ஜுனா என தெரிவித்துள்ளார்.