October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2022 கோடை விடுமுறையில் குளிர்விக்க வரும் ‘பொன்னியின் செல்வன்’

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 2022 கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ முதல் பாக படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள் .

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுவதும் பல்வேறு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடைபெற்றது.

இறுதியாக தமிழகத்தின் பொள்ளாச்சியில் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.

இரண்டாம் பாகத்துக்கு இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே எடுக்க வேண்டியிருப்பதால் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

முதல் பாகத்தின் இறுதிக் கட்டப் பணிகளை முழுமையாக முடித்துவிட்டு, இரண்டாம் பாகத்தின் காட்சிகளில் இயக்குனர் மணிரத்னம் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் நிறைவடைந்து உள்ளதால் அதில் உள்ள கலைஞர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன .

தமிழ் சினிமாவில் பலரும் எடுக்க முயன்ற படம்தான் இந்த பொன்னியின் செல்வன்.ஆனாலும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தான் தற்போது உருவாகியிருக்கிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், நடிகை ஐஸ்வர்யாராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி,சோபிதா, நடிகர் பிரபு, சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஜெயராம், பிரகாஷ்ராஜ், ரகுமான் ,விக்ரம் பிரபு, விஜய் யேசுதாஸ்,அஸ்வின், ரியாஸ்கான்,நிழல்கள் ரவி,நாசர், கிஷோர், லால், மோகன் ராம், அர்ஜுன் சிதம்பரம், பாலாஜி சக்திவேல், பார்த்திபன், ஜெயசித்ரா, வினோதினி என பலர் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பாடல்கள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையின் திரைக்கதை ஆசிரியர்களாக மணிரத்னம், ஜெயமோகன், குமாரவேல் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

தமிழ் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமான ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் 2022 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.