July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருப்பதியில் முத்தத்தால் சர்ச்சையில் சிக்கிய நடிகை!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த நடிகை ஸ்ரேயா மற்றும் ஆண்ட்ரெய் கோச்செவ் தம்பதி முத்தமிட்டுக்கொண்டதால் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

நடிகை ஸ்ரேயா கடந்த மார்ச் 12 ம் திகதி ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரரான ஆண்ட்ரெய் கோச்செவ்வை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஸ்ரேயா தனது கணவருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருமலை வந்திருந்தார்.

இந்த தம்பதியினர் விஐபி தரிசனத்தின்போது சுவாமியை தரிசனம் செய்துள்ளனர்.அதன் பின்னர் கோவிலுக்கு வரும் விஐபிகளுக்கு மரியாதை செய்யப்படும் ரங்கநாயக மண்டபத்தில் இவர்களுக்கு தீர்த்தம், பிரசாதங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதன் பின்னர் கோவிலுக்கு வெளியே வந்த இவர்களுடன் சிலர் புகைப்படங்களும் சேர்ந்து எடுத்துக் கொண்டனர்.

அப்போது, ஸ்ரேயாவிற்கு அவருடைய கணவர் ஆண்ட்ரெய் கோச்செவ் முத்தம் கொடுத்ததாகக் கூறி அங்கிருந்த பக்தர்கள் சிலர் சர்ச்சையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

புனித தலமாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் கோபுரத்தின் முன் முத்தம் கொடுப்பதா என சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஸ்ரேயாவிற்கு அவரது கணவர் கோயிலின் முன் முத்தம் கொடுத்தது தற்போது ஆன்மீகவாதிகள் இடையை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஸ்ரேயா தற்போது இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவர உள்ள ஆர். ஆர்.ஆர் திரைப்படத்தில் நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

மேலும் பல மொழிகளில் வெளியாக உள்ள கமனம் என்னும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் ஸ்ரேயா செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.