July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரசிகர்களுக்கு நிபந்தனையற்ற அன்பை வழங்குகிறேன்; நடிகர் அஜித்குமார்

தமிழ் சினிமாவில் காலடி வைத்து 30 ஆண்டுகள் நிறைவதையொட்டி நடிகர் அஜித்குமார் ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றினூடாக நன்றி தெரிவித்திருக்கிறார்.

ரசிகர்களுக்கு தனது நிபந்தனையற்ற அன்பை வழங்குவதாக அஜித் குமார் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முதன்முதலாக 1991 ஆம் ஆண்டு பிரேம புத்தகம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார் நடிகர் அஜித்குமார்.

நடிகர் அஜித்குமாரின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா தன்னுடைய ட்விட்டரில் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இந்த முப்பது வருட சினிமா வாழ்க்கையில்,ரசிகர்களின் அளவு கடந்த அன்பையும் விமர்சகர்களின் விமர்சனத்தையும் ஏற்கிறேன்.வாழு வாழ விடு என்ற கருத்தை கூறியுள்ள நடிகர் அஜித்குமார், ரசிகர்கள் மீது எல்லையற்ற அன்பை கொண்டிருப்பதாகவும் அறிக்கையில் கூறியுள்ளார்.