October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இனி அது பற்றி பேசவேண்டாம்;விஜய் சேதுபதி வேண்டுகோள்

நன்றி வணக்கம் என்றால் எல்லாம் முடிந்துவிட்டது என்றுதானே அர்த்தம். இனி அது பற்றி பேசவேண்டாம் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்திற்கு சென்றுவிட்டு திரும்பிய விஜய் சேதுபதியிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் நன்றி வணக்கம் என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது என்றுதானே பொருள். இது பற்றி இனிமேல் பேச வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

இன்று விஜய் சேதுபதியை 800 படத்தில் நடிக்கவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கும் விதத்தில் முத்தையா முரளிதரன் கடிதமொன்றை வெளியிட்டிருந்ததும் அதனை தனது டுவிட்டரில் பதிவிட்டு நன்றி வணக்கம் என விஜய் சேதுபதி குறிப்பிட்டிருந்ததும் பல்வேறு ஊகங்களை உருவாக்கியிருந்தது.

அதன் அர்த்தம் விஜய் சேதுபதி இனிமேல் அந்த படத்தில் நடிக்கமாட்டார் என்பதே என ஊகங்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே, விஜய்சேதுபதி நன்றி வணக்கம் என்றால் எல்லாம் முடிந்துவிட்டது என்றுதானே அர்த்தம் என குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த கருத்தினை சில திரையுலக பிரபலங்கள் சமூக ஊடகங்களில் வரவேற்க ஆரம்பித்துள்ளனர்.