![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/07/dr-1.jpg?fit=500%2C374&ssl=1)
இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாண்டிச் சேரியில் நடைபெற்று வருகிறது.
பாண்டிச் சேரியில் நடைபெறும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகளுடன் வந்துள்ளார்.
இந்நிலையில்,நடிகர் சரத்குமாரும் தனது குடும்பத்தினருடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.இந்த இரண்டு குடும்பங்களும் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள வரலட்சுமி சரத்குமார், ஐஸ்வர்யா ராய் குடும்பத்தை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
மிகப்பெரிய கலைக் குடும்பமாக இருந்தாலும் அன்புடன், அரவணைப்புடன் நடந்து கொண்ட விதம் ஆச்சரியம் அளிப்பதாக வரலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ராயின் குடும்பத்தை சந்தித்த நிகழ்வு மிகவும் இனிமையானது என குறிப்பிட்டிருக்கிறார் வரலட்சுமி.
பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர் மணிரத்னம்.பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி,சரத் குமார்,விக்ரம்,
கார்த்தி,ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா,பேபி சாரா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அண்மையில் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கு மணிரத்தினத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.