July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் பட பாடல் வெளியானது

நயன்தாராவின் நடிப்பில் வெளிவரவுள்ள நெற்றிக்கண் படத்தின் ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவும் கடந்து போகும் பாடலை பிரபல பின்னணி பாடகர் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். இதனை பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார்.

வலிகளை மறைக்க வழி இதுதான் என ,இதுவும் கடந்து போகும் என்ற வரிகளை அமைத்து வலிகளை மறந்து மீண்டெழ ஒரு அருமையான பாடலை இந்த சந்தர்ப்பத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள் நெற்றிக்கண் படக்குழுவினர்.

உலகம் முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் உடைந்து போயிருக்கும் உறவுகளையும், வலிகளை சுமந்து திரியும் மக்களையும் மீட்டெடுக்கும் வகையில் இந்த பாடல் அமைக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், முன் களப்பணியாளர்கள் ,துப்புரவு பணியாளர்கள் ,ஆம்புலன்ஸ் ஓட்டிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆறுதல் சொல்லும் வகையிலும் அவர்களுக்கு ஒரு புத்துணர்வையும் ஊட்டும் வகையிலும் இந்த பாடல் வரிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சுடரி சுடரி உடைந்து போகாதே…
உடனே அது மறைந்து போகாதே…
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே…

என வலிகளை சுமந்து மனக் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு ஆறுதல் தரும் பாடலாக அமைந்திருக்கிறது .

தடைகளைத் தகர்த்து எழுந்து வா என மக்களை அழைக்கிறது இதுவும் கடந்து போகும் பாடல் .

இப்பாடலுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு இருக்கிறது, நயன்தாராவின் ரசிகர்களும் இதனை வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.
நெற்றிக்கண் படக்குழுவினரின் சிறப்பான செயல் இதுவென சமூக வலைத்தளங்களில் வாழ்ந்திருக்கிறார்கள் .

இவ்வாறான ஒரு அசாதாரண சூழ்நிலையில் இவ்வாறான பாடல்கள் அதிகம் தேவை எனவும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு இருக்கிறார்கள்.

பார்வையற்ற ஒரு பெண்ணாக நடிக்கும் நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம் பலருக்கும் பல்வேறு தகவல்களையும் சொல்லும் என நாம் எதிர்பார்க்கலாம்.

தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளால் உருவாகியுள்ள இந்த அனிமேஷன் வீடியோ பாடலில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான பணிகளில் பணியாற்றி வரும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தொடர்ச்சியாக தனித்துவமான கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.

நெற்றிக்கண் திரைப்படத்தில் பார்வையற்றவராக நடிக்கும் நயன்தாரா சிறப்பான தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படம் நயன்தாராவுக்கு 65வது திரைப் படமாக அமைந்திருக்கிறது.

கடந்த ஆண்டு நெற்றிக்கண் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் என்ற இயக்குனர்தான் இந்த நெற்றிக்கண் படத்தையும் இயக்கியுள்ளார்.