July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நேர்மறையான சிந்தனையுடன் இருப்பவர் தளபதி விஜய்;மாளவிகா மோகனன்

தளபதி விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன்.நடிகை மாளவிகா மோகனன் அண்மையில் ஒரு சிறப்புப் பேட்டியில் விஜய் பற்றி பேசியிருக்கிறார்.

நண்பர்களுக்காக எப்போதுமே இருப்பவர் தளபதி விஜய் என மாளவிகா மோகனன் புகழ்ந்திருக்கிறார்.

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் மூலமாகத்தான் மாளவிகா மோகனன் முதன் முதலில் தமிழில் அறிமுகமானார்.தற்போது மாளவிகா மோகனன்,இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக மாறியுள்ளது பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் மாளவிகா மோகனன் .விஜயின் நட்பின் ஆழத்தை அறியவே முடியாது என கூறியுள்ள மாளவிகா ,விஜய் நண்பர்களுக்காகவே எப்போதும் இருப்பவர் என குறிப்பிட்டுள்ளார்.

எப்போது பேச வேண்டுமானாலும் அவரை அழைக்கலாம் என கூறியுள்ள மாளவிகா, அலட்டிக்கொள்ளாமல் தொலைபேசியில் பதிலளிப்பார் எனவும்,முடியும் என்றால் உதவி செய்வார் எனவும் தெரிவித்திருக்கிறார்.

தன்னிடம் மட்டுமல்லாமல் அவருடைய சக எல்லா நண்பர்களிடமும் அவ்வாறே தான் தளபதி விஜய் நடந்து கொள்வார் எனவும் மாளவிகா மோகனன் புகழ்ந்திருக்கிறார்.

தமது சில நெருங்கிய நண்பர்களுக்கு தொலைபேசியில் அழைத்தால் பிஸியாக இருப்பதாக காட்டிக் கொள்வார்கள் எனக் கூறியிருக்கும் மாளவிகா மோகனன் ,ஆனால் தளபதி விஜய் அவர்கள் அழைத்தால் இயல்பாகவே பேசுகிறார் எனக் கூறியிருக்கிறார்.

மேலும் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பு குறித்தும் அதில் நடைபெற்ற சுவாரசிய சம்பவங்கள் குறித்தும் மாளவிகா மோகன் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

மிகவும் இனிமையான நபர் விஜய்,எப்போதுமே உற்சாகமாக, நேர்மறையான சிந்தனையுடன் இருப்பவர் என கூறியிருக்கிறார்.

படப்பிடிப்புக்கு தயாரான பிறகு அன்றைய நாளில் படப்பிடிப்பு ரத்தானால் நாங்கள் புலம்புவோம்.ஆனால் பரவாயில்லை, இப்படி நடப்பது சகஜம் தான் என்று அதைக் கடந்து போய் விடுவார் தளபதி விஜய் என கூறியுள்ள மாளவிகா மோகனன், அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.