July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இயக்குநர் கே.வி.ஆனந்த் காலமானார்

இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று (வெள்ளிக்கிழமை)அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54.

தமிழ்த்திரையுலகம் தொடர்த்து திடீர் இழப்புகளை சந்தித்துவருகிறது. நடிகர் விவேக் மரணமடைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத திரையுலகம் அடுத்து இயக்குநர் கே.வி. ஆனந்தை இழந்திருக்கிறது.

பத்திரிகையில் புகைப்படக்கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய கே.வி. ஆனந்த், சினிமாவுக்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்து பின்னர் இயக்குநர் ஆனவர். 2005 ம் ஆண்டு பிரித்வி ராஜ், ஶ்ரீகாந்த் நடித்த ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் இயக்குனராக கால்பதித்த கே.வி. ஆனந்த், அதன் பிறகு தொடர்ந்து ‘அயன்’, ‘மாற்றான்’, ‘காப்பான்’ ‘கோ’,’அநேகன்’, ‘கவண்’,  என பல படங்களை நடிகர் சூர்யாவை ஹீரோவாக வைத்து இயக்கினார்.இதுதவிர, காதல் தேசம், முதல்வன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி போன்ற வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.

கே.வி.ஆனந்துக்கு நேற்று(வியாழக்கிழமை) இரவு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.ஆனால், அவரது உயிரை வைத்தியர்களால் காப்பாற்றமுடியவில்லை. இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணித்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது!

தற்போது ராமாபுரம் மியாட் மருத்துவமனையில் இருக்கும் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.