
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளதாக நடிகர் சூர்யா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு,சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாக நடிகர் சூர்யா கூறியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் எனவும் வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும் கவனமும் அவசியம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும் நன்றிகளும்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இவ்வளவு நாளும் நடிகர் சூர்யாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பது வெளியில் யாருக்கும் தெரியாத நிலையில், குணம் அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.