July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆயிரத்தில் ஒருவன் பாகம்- 2 பற்றிய தகவல் வெளியானது

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பாகம்-2 குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆன்ட்ரியா, ரீமாசென் உள்ளிட்டோர் நடித்த படம்தான் ஆயிரத்தில் ஒருவன் .இந்தப் படம் 2010 ஆம் ஆண்டு வெளியானது.

இந்தப்படம் வெளியான சமயத்தில் மிகப்பெரிய வெற்றியையோ,நல்ல விமர்சனங்களையோ பெறவில்லை. இருந்தபாேதிலும் காலப்போக்கில் இந்த படத்தின் கதைக்களம் பலராலும் புரிந்துகொள்ளப்பட்டு பாராட்டப்பட்டது. புலிக்கொடி ஏந்திய சாேழர் வரலாற்றுக்கதையை மையப்படுத்தி, தற்காலத்தில் இருந்து மூதாதையர்களைத் தேடிச் செல்லும் ஆயிரத்தில் ஒருவன் மாறுபட்ட அனுபவத்தைக் கொடுத்தது.

தற்பாேது இது உலகத் தரம் வாய்ந்த படைப்புகளில் ஒன்றாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. இதனால் ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 எப்போது வரும் என இயக்குனர் செல்வராகவனிடம் ரசிகர்கள் பலரும் கேட்டு வந்த நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 ல் தனுஷ் நடிக்க இருப்பதாக செல்வராகவன் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

ஆனால் இந்தப்படம் 2024 ஆம் ஆண்டுதான் வெளியாகும் என்றும் டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 படத்திற்கு ஏன் இவ்வளவு காலம் தேவை என தெரியவில்லை. பிரம்மாண்ட படைப்பாக இருந்தால்தான் அதிகளவு காலம் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவிப்பு வெளியான அதேநேரத்தில்,சோழனின் பயணம் தொடர்கிறது என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

புத்தாண்டு தினமான இன்று தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் 2024ல் வெளியாகும் என்று படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 இயக்குனர் செல்வராகவனின் கனவுப் படம் எனவும் இதற்காக நீண்ட காலம் காத்திருப்பதாக நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.