October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கூழாங்கல்’லை வாங்கிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் படங்களை இயக்குவது மட்டுமன்றி ஒரு தயாரிப்பாளராகவும் விளங்குகிறார். அவருடன் தற்போது நடிகை நயன்தாராவும் இணைந்துள்ளார்.

ராக்கி ,நெற்றிக்கண் ஆகிய படங்களை ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வழங்கவுள்ளது. இதைத்தொடர்ந்து ‘கூழாங்கல்’ என்ற திரைப்படத்தை வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இந்த ரெளடி பிக்சர்ஸ் சார்பில் படத்தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் இறங்கியிருக்கின்றனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும்.

இந்த நிறுவனத்தின் சார்பில் தற்போது நெற்றிக்கண் ,காத்துவாக்குல இரண்டு காதல் படங்கள் உருவாகி வருகின்றன. இதுதவிர அண்மையில் அருண் மாதேஸ்வரனின் ராக்கி என்ற படத்தின் தயாரிப்பையும் இவர்கள் கைப்பற்றி இருந்தார்கள்.

இந்நிலையில் புதுமுக நடிகர்களின் நடிப்பில் வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ளது கூழாங்கல்.

இந்நிலையில் இப்படத்தின் முழு தயாரிப்பு உரிமையை இவர்கள் பெற்றிருக்கிறார்கள். இந்த படம் தங்களுக்கு ஏற்படுத்திய பெரும் தாக்கத்தை ரசிகர்களுக்கும் ஏற்படுத்தும் என நம்புவதாக நயன்தாரா கூறியிருக்கிறார் . இதை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் ‘ரெளடி பிக்சர்ஸ்’ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறிய பட்ஜெட் படமான கூழாங்கல்லை கைப்பற்றியது தொடர்பாக விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதில் மிக அரிதான ஒரு படைப்பைப் பார்த்து வியந்து, அதை வாங்கி வழங்க உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். இதனால் தாம் இருக்கும் துறையை நினைத்து பெருமை கொள்வதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

கூழாங்கல் இயக்குனர் வினோத்ராஜின் முதல் படம் எனவும் தலைப்பைப் போலவே படமும் எளிமையாக இருந்ததாகவும், அது தங்களுக்கு ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது என அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

முழுவதும் அறிமுக நடிகர்கள்,அறிமுக இயக்குனர் என எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை உயிரோட்டம் தந்துள்ளதாக விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கூழாங்கல் திரைப்படம் அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கையில், இத்திரைப்படத்தை வாங்குவதில் பெருமிதம் கொள்வதாக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கூறியிருக்கிறார்கள்.