October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு கொரோனா

நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் தனக்கு கொராேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் பல படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வந்த நிலையில் கொரோனா தாெற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இருந்த பாேதிலும் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

யுவன், தடையறத்தாக்க ,என்னமோ ஏதோ, காக்கி ,தீரன் அதிகாரம் ஒன்று ,தேவ், என் ஜி கே, அயலான் போன்ற தமிழ் படங்களில் இவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். .

கொரோனா தொற்று ஏற்பட்டாலும் தான் நலமுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

‘மேடே’ என்ற படப்பிடிப்பிற்கு தயாரான நிலையிலேயே அவருக்கு கொராேனாத் தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் பிரபலமான இவர் தனக்கு கொரோனா இருப்பதை
டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.