October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

12 ஆண்டுகளுக்குப் பின் சேர்ந்த சூர்யாவும் கெளதம் மேனனும்

வாரணமாயிரம் திரைப்படம் என்றால் யாவருக்கும் நினைவுக்கு வருவது அதில் உள்ள இனிமையான பாடல்கள் தான்.

அருமையான காட்சி அமைப்பும் அழகான கதை வசனமும் படத்தின் விறுவிறுப்பும் இன்றளவும் யாராலும் மறக்க முடியாது.

சூர்யா,கெளதம் மேனன் இருவரும்,வெற்றிப் படங்கள் என இளம் நெஞ்சங்களில் ரசனைக்கு தகுந்தவாறு என்றும் இருக்கை போட்டு அமர்ந்தவர்கள் இவர்கள்.

ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் கூட்டணியாக ஜொலித்தவர்கள் தான் நடிகர் சூர்யாவும் இயக்குநர் கௌதம் மேனனும்.

காக்க காக்க ,வாரணமாயிரம் ஆகிய படங்கள் தமிழ் சினிமாவில் புதுமை புகுத்தத் தொடங்கிய காலமாகும். இன்று வரை பேசும் அளவிற்கு படம் எடுத்துள்ளார்கள் என்றால் அது மிகையல்ல.

கடைசியாக துருவநட்சத்திரம் என்ற படத்தில் இணைந்து பணியாற்ற முடிவெடுத்த சமயத்தில்தான் கௌதம் மேனனுக்கும் சூர்யாவுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்திலிருந்து சூர்யா விலகியதாக ஒரு தகவல் வெளியாகியது.

காக்க காக்க,வாரணமாயிரம் இரண்டு படமுமே மிகப்பெரும் வெற்றியை கொடுத்தது என்பது யாவரும் அறிந்த உண்மையே. பிற்காலத்தில் இது போன்ற படங்கள் மீண்டும் வருமா என ஏங்கித் தவித்த ரசிகர்கள் ஏராளம் உண்டு .

மீண்டும் இந்த கூட்டணியினர் இணைந்த ஒரு இனிமையான செய்தி வந்திருக்கிறது. இந்த இருவரும் இணைந்து மீண்டும் ஒரு படம் தர மாட்டார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

தற்போது ஒரு படத்திற்காக கௌதம் மேனனும் சூர்யாவும் இணைந்து பணியாற்றுகின்றனர். நவரசா என்ற ஒரு ஆந்தாலஜி படத்தில் இருவரும் விறுவிறுப்பாக பணியாற்றுகின்றனர்.

இந்த படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவை கௌதம் மேனன் இயக்கும் சில புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த நவரசா வெப்சீரிஸுக்கு பிறகு பெரிய திரையில் இவர்கள் இருவரையும் இனி பார்க்கலாம் என தோன்றுகிறது.

நவரசா படத்தில் நவரசங்களும் நிறைந்திருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.