October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் மிரட்ட வருகிறது ‘அரண்மனை 3’  

காமெடிக்கும், கலகலப்புக்கும், அமானுஷ்யத்திற்கும் கொஞ்சம் கூட குறைவில்லாமல் ரசிகர்களை கவரும் விதமாக தரமான படத்தை கொடுப்பவர் இயக்குநர் சுந்தர். சி.

அவரது இயக்கத்தில் உருவான அரண்மனை  திரைப்படம் தற்போது மூன்றாவது பாகமாக வெளிவர இருக்கிறது.

இதன் இறுதிக் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்புடன் தொடங்கியுள்ளது. ஆக்‌ஷன் படத்தை தொடர்ந்து மீண்டும் “அரண்மனை- 3” படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளார் சுந்தர். சி.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பிரம்மாண்ட அரண்மனையில் நடைபெற்றது.

இந்த படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதனால் அரண்மனை 3 படத்தில் காமெடிக் காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது எனத் தோன்றுகிறது.

சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் சண்டைக் காட்சி ஒன்றை படமாக்குவதற்காக பிரமாண்ட அரண்மனை போன்ற அரங்கை சுமார் 2 கோடி ரூபாவில் படக் குழுவினர் உருவாக்கி இருக்கின்றனர்.

“அரண்மனை 3” போன்ற ஒரு பேய்ப் படத்துக்காக சென்னையிலேயே இரண்டு கோடி ரூபா செலவில் ஒரு பிரமாண்ட அரண்மனை உருவாக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.

தற்போது பிரமாண்ட அரண்மனையில் படப்பிடிப்பை முடித்து விட்டு இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் கோவை மாவட்டத்தில் உள்ள இயற்கை அழகு நிறைந்த பொள்ளாச்சி நோக்கி சென்றுள்ளனர்.

“அரண்மனை 3” படத்தின் ஒட்டு மொத்த படக்குழுவினரும் அங்கு இருப்பதால் முக்கியமான காட்சிகளை பொள்ளாச்சியில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்.

சுந்தர். சி டிசம்பர் முதலாம் திகதியுடன் படப்பிடிப்பை முடிக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது.

ஏற்கனவே சுந்தர். சி இயக்கத்தில் எடுக்கப்பட்ட அரண்மனை படத்தின் முதல் இரு பாகங்களின் தொடர்ச்சியாகவே இந்தப் படம் எடுக்கப்படுகிறது.

“அரண்மனை 3” படத்தின் கடைசிக் கட்ட படப்பிடிப்பு தற்போது பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் நிலையில், முதல் முறையாக பொள்ளாச்சிக்கு சென்றிருக்கும் ராஷி கண்ணா அங்கு இருக்கும் இயற்கை அழகில் மயங்கி விட்டார் போலிருக்கிறது.

அவர் சில வீடியோக்களையும், புகைப்படங்களையும் எடுத்து பொள்ளாச்சியின் அழகில் தான் மயங்கியதாக  கவிதைகளை எழுதி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.