July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொழில் பிரச்சனைகள் தொடர்பாக முறையிடுமாறு தனியார் துறை ஊழியர்களுக்கு கோரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நிலைமையில் தனியார் துறை ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக தங்களுக்கு அறியத்தருமாறு தொழில் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொழிலில் இருந்து நீக்கப்படுதல், சம்பளம் வழங்கப்படாமை உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக தொழில் திணைக்களத்திற்கு முறையிட முடியுமென்று தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

தொழில் திணைக்களத்தின் மாகாண அல்லது மாவட்ட அலுவலகங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறு பாதிக்கப்பட்டுள்ள தனியார் துறை ஊழியர்களை கேட்டுக்கொள்வதாக தொழில் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தமக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.