
இலங்கை அணிகள் ஆசியக் கிண்ணங்களை வென்றெடுத்தமைக்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவே காரணம் என்று பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் வலைப் பந்து அணி ஆகியன இறுதிப் போட்டியில் வெற்றிபெற்றன.
இந்த அணிகள் நேற்றைய தினம் நாடு திரும்பியதுடன், அவர்களுக்கு விமான நிலையத்தில் இருந்து விசேட வரவேற்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வெற்றிகளின் பின்னணியில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவே இருக்கின்றார் என்று பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டரை வருடங்களாக நாமல் ராஜபக்ஷவே விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்ததாகவும், இதன்போது அவர் ஆற்றிய சேவையின் பெறுபேறுகள் தற்போது கிடைத்து வருவதாகவும் மதுர விதானகே கூறியுள்ளார்.
இதனால் அமைச்சுப் பதவிகளை வழங்கும் போது, நாமல் ராஜபக்ஷவுக்கு முக்கிய பதவிகளை வழங்குவது மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.